ஆன்மிக வழி பயணம்

திரு பாபுஜி மகராஜின் வழிகாட்டுதல் அடிப்படையில் அவரது ஆன்மீகப் பயணமானது தொடர்ந்தது. இயற்கையின் வேண்டுகோளுக்கிணங்க மக்களை ஜீவிக்கவே திரு பாபுஜி மகராஜ் வானுலகத்திலிருந்து இறங்கி வந்துள்ளார் என அவர் கூடிய விரைவிலேயே உணர்ந்து கொண்டார். 7ம் தேதி நவம்பர் மாதம் 1953ம் ஆண்டு சகோதரி கஸ்தூரி [Perceptor] வழி நடத்துபவராக திரு பாபுஜி மகராஜ் அவர்களால் நியமனம் செய்யப்பட்டார். அதன் அடிப்படையில் அவர் தனது பணியினை தொடர்ந்து செய்து முழுமையாக பாபுஜியிடம் தன்னை ஒப்படைத்தார். அவர் இயற்கை விதிகளான வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். திரு பாபுஜி மகராஜ் தனக்கு அளிக்கப்பட்ட பணிகளை சிரத்தையுடன் செய்து வந்தார்.

27ம் தேதி அக்டோபர் மாதம் 1953ம் ஆண்டு பாபுஜி மகராஜ் அவளுக்கு ‘சந்நியாச தீட்சை’ [Saint Gati] மற்றவர்களிடம் அவள் ஒரு சந்நியாசி என அறிமுகப்படுத்தினார்.

29ம் தேதி ஆகஸ்ட் மாதம் 1955ம் ஆண்டு பாபுஜி மகராஜ் அவருக்கு எழுதிய கடிதத்தில் ‘நீ என்னோடு லயமாகி விட்டாய்.இனிமேல் உனது பெற்றோர்களால் பெற்றெடுக்கப்பட்ட கஸ்தூரி நீ இல்லை என கூறினார்.

15ம் தேதி செப்டம்பர் மாதம் 1964ம் ஆண்டு பாபுஜி மகராஜ் அவருக்கு கடிதம் எழுதினார். ஆதில் நீ கடவுளின் தன்மையை அடைந்து விட்டாய். 15ம் தேதி செப்டம்பர் மாதம் 1967ம் ஆண்டு அவர் மத்திய பகுதியில் [Centre region] நுழைந்தார். 28ம் தேதி ஜீன் மாதம் 1968ம் ஆண்டு அவர் எல்லையற்ற ஆனந்த நிலையை [Bliss] அடைந்தார். அவர் 2ம் தேதி மே மாதம் 1975ம் ஆண்டு பாபுஜிக்கு எழுதிய கடிதத்தில் எல்லையற்ற ஆனந்த சாகரத்தில் மூழ்குவதற்கு ஒருவர் என்னை தள்ளி விட்டார் என எழுதினார்.